தேர்தல் ஆணையம் புதிய எச்சரிக்கை.. உஷார்

54620பார்த்தது
தேர்தல் ஆணையம் புதிய எச்சரிக்கை.. உஷார்
தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படுபவை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இன, மத, சாதிக்கு எதிரான உள்ளடக்கம், பொய்ப் பிரச்சாரம், சரிபார்க்கப்படாத செய்திகள், தனிப்பட்ட அந்தரங்க தகவல்கள், வன்முறையைத் தூண்டும் செய்திகள், ஆபாச செய்திகள், தவறான புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைப் பகிர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்புடைய செய்தி