‘கம்ப்ளைன்ட் பண்ணி 9 நாள் ஆச்சு’ - ஆதங்கத்தில் இளம்பெண்

84பார்த்தது
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் (மே.16) புகார் அளித்தார். அந்தப் பெண் இன்று (மே 23) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “நான் புகார் அளித்த 9 நாட்கள் ஆன நிலையில் இன்னும் கார்த்திக் கைது செய்யப்படவில்லை. அவருக்கு உறுதியாக இருந்த காளிதாஸ் வெளியில் தான் இருக்கிறார். கார்த்திக் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி