கலை அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு!

62பார்த்தது
கலை அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு!
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் கலை அறிவியல் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விடுமுறை முடிந்து உற்சாகமுடன் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வருகை தந்துள்ளனர். ‘பஸ் டே’ போன்ற விதிமீறல்களில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், பேருந்து, ரயில்களில் மாணவர்கள் விதிமீறலில் ஈடுபடுகிறார்களா என சிறப்பு குழு மூலம் கண்காணித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி