பார்ட் டைம்மாக கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் கைது

62பார்த்தது
பார்ட் டைம்மாக கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் கைது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ராஜவிக்ரம் ஆதித்யா (20), பீகாரைச் சேர்ந்த ரோகித்குமார் (21) ஆகியோர் படித்து வந்தனர். இவர்கள் இருவரும், கல்லூரியில் படித்துக்கொண்டே பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்று வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மாணவர்கள் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா, எடை இயந்திரம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி