மது குடிக்க பணம் பறிப்பில் ஈடுபட்ட தொழிலாளி கைது

51பார்த்தது
மது குடிக்க பணம் பறிப்பில் ஈடுபட்ட தொழிலாளி கைது
கோவை கவுண்டம்பாளையம் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் நாகராஜ்(48). பேக்கரி ஊழியர். இவர் நேற்று பி அண்ட் டி காலனியில் உள்ள பேக்கரி அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மது குடிக்க பணம் தருமாறு கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் நாகராஜிடம் இருந்த ரூ. 500 ஐ பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜ் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அந்த வாலிபர்கள் அவர்களை மிரட்டி விட்டு சென்றார். இது குறித்து நாகராஜ் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், பணம் பறித்தது கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி விஜயகுமார்(47) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி