பெட்டிக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்

77பார்த்தது
பெட்டிக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்
கோவை டாடாபாத் கந்தசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் சதீஷ்(41). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சதீஷ் கடையில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த சிலர் சதீசிடம் தகராறு செய்தனர். இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி சதீசை தாக்கினர். பின்னர் அவரை மிரட்டி விட்டு சென்றனர். இது குறித்து சதீஷ் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் சதீசை தாக்கியது கார்த்திக் உட்பட 3 பேர் என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி