கம்பில் இருந்து எத்தனால் தயாரிக்க ஆய்வு -வேளாண் இயக்குனர்

67பார்த்தது
கம்பில் இருந்து எத்தனால் தயாரிக்க ஆய்வு -வேளாண் இயக்குனர்
பெருகிவரும் எத்தனால் தேவையைக் கருதி, கம்பு நேப்பியர் புல்லில் இருந்து எத்தனால் தயாரிப்பதற்கான ஆய்வு நடந்து வருகிறது, ” என, கோவை வேளாண் பல்கலை, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் ரவிகேசவன் தெரிவித்துள்ளர். கரும்பில் இருந்து அதிகம் எத்தனால் எடுத்தால், சர்க்கரை உற்பத்தி பாதிக்கும் என அச்சம் இருப்பதால், அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எத்தனால் ஒரு லிட்டர் தயாரிக்க, 7 முதல் 8 ரூபாய் வரை செலவாகிறது. பகாஸ் மூலப்பொருளில் எடுத்தால் 23 ரூபாய் வரை ஆகும். எத்தனாலை குறைந்த விலைக்கு எடுத்தால் தான், பெட்ரோலில் கலப்பதற்கான பயன் கிடைக்கும். குறைந்த செலவில் எத்தனால் எடுக்க, கம்பு நேப்பியர் புல் குறித்து ஆய்வைத் தொடர்கிறோம்
என கூறியுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி