மாற்றுத்திறனாளி மாரத்தான் போட்டி

50பார்த்தது
உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - மாற்றுத்திறனாளி உட்பட 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பு.

உடல்பருமன் கட்டுப்பாடு அவசியம் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.

உடல் பருமனால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்களுக்கு எடுத்து கூறும் வகையில்
கோவை விஜிஎம் மருத்துவமனை மற்றும் அத்தலெட்டிக் கிளப் சார்பில் உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாரத்தான் ஓட்ட பந்தயம் கோவை வ. உ. சி மைதானத்தில் நடைபெற்றது.

இதனை மருத்துவர் மோகன் பிரசாத், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து 10கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 3 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆண்கள், பெண்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.

தொடர்புடைய செய்தி