மாநகரப் பகுதிகளில் 280 போதை மாத்திரைகள் பறிமுதல்

72பார்த்தது
கோவையில் 280 போதை மாத்திரைகள் பறிமுதல்: கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் கைது

கோவையில் வெவ்வேறு இடங்களில் 280 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
கோவையில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அடிக்கடி சோதனை நடத்தி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்கின்றனர்.

இந்நிலையில் காந்திபுரம் டவுன் பேருந்து நிலைய பின்புறம் சிலர் போதை மாத்திரை விற்பனை செய்வதாக காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தொடர்புடைய செய்தி