திமுக வேட்பாளரை ஆதாரித்து வாகை சந்திரசேகர் பிரச்சாரம்

60பார்த்தது
வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய கூட்டணி சார்பாக திமுக வேட்பாளரை ஆதாரித்து வாகை சந்திரசேகர் வாக்கு சேகரித்தார்.

இந்திய கூட்டணி திமுக சார்பாக களம் இறங்கியுள்ள வேட்பாளர் முனைவர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து நடிகர் வாகை சந்திரசேகர் அவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்க்கொண்டார. பகுதி செயலாளர் சிரவைசிவா என்கிற பழனிசாமி தலைமையில் சின்னவேடம்பட்டி ராமர் கோவில் திடலில் புதன்கிழமை இன்று வாக்கு சேகரிப்பு நிகழ்வு நடைப்பெற்றது. சிறப்பு பேச்சளராக நடிகர் வாகை சந்திரசேகர் அவர்கள் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு தீவிர வாக்கு சேகரித்து மக்களிடம் பேசுகையில் பாஜக அரசினால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். பாஜக மோடி அரசின் பொய்யான வாக்குறிதிகளை கூறி வாக்கு சேகரிக்கிறார்கள், அவர்களை நம்பி வாக்கு அளிக்கதீர்கள் என்று தெரிவித்தார். இப்பிரச்சாரம் சின்னவேடம்பட்டி ராமர் கோவில் திடலில் தொடங்கி வெள்ளகிணறு, பெரியநாயக்கன்பாளையம், அசோகபுரம் என பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தனர். இதில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், 12வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, 3வது வார்டு மாமன்ற உறுப்பினர் கவிதா செளந்தராஜன், காங்கிரஸ் கட்சி தேவராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பகுதி செயலாளர் கார்த்திகேயன், CPM செயலாளர் பாலசுப்ரமணியன், மோகன் மற்றும் ஏராளமான கூட்டாணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி