4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

50பார்த்தது
4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
சென்னை: கிழக்கு கடற்கரை சாலையின் கோவளம் அடுத்த செம்மஞ்சேரியில் இன்று காலை (செப்டம்பர் 04) நின்று கொண்டிருந்த ஈச்சர் வாகனத்தில் கார் மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த 4 பேரும் உடல்நசுங்கி உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கிய உடல்களை தீயணைப்புத் துறை உதவியுடன் கேளம்பாக்கம் போலீசார் மீட்டனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி