லயன்ஸ் கிளப் கோயம்புத்தூர் சாய்பாபா காலனி சார்பில் அன்னதானம்

53பார்த்தது
லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் 324 டி மாவட்டத்தின் லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சாய்பாபா காலனி சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை கணபதி மோர் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குப்பமண் மாரியம்மன் திருக்கோயிலில் லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சாய்பாபா காலனி சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

42 வருடமாக தொடர்ந்து ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அன்னதான நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அன்னதான நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மலர்விழி ராஜு கவுண்டர் அறக்கட்டளையின் அரிமா பி. ஆர். சண்முகசுந்தரம் செய்திருந்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் சண்முகசுந்தரம், சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாவட்ட ஆளுநர் பி கே ஆறுமுகம், எல். சி கோயம்புத்தூர் சாய்பாபா காலனி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் ஜோன் சேர்மன் டென்னிஸ் செல்வராஜ் மற்றும் சாய்பாபா காலனி முன்னாள் செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னாள் பொருளாளர் தங்கவேல் ஜுபிடர் கிளப் முன்னாள் தலைவரும் ஜூன் சேர்மன் ஆகிய பொன்னம்பலம் அவர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியை, லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சாய்பாபா காலனி தலைவர் சுரேஷ் மோகன் குமார், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ராம்குமார் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தினர். இதில் 400-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி