தொழிலாளிக்கு சரமாரி அடி, உதை வாலிபர் கைது

60பார்த்தது
தொழிலாளிக்கு சரமாரி அடி, உதை வாலிபர் கைது
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(36). கூலி தொழிலாளி. இவர் நேற்று தடாகம் ரோடு ராயப்பபுரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கினார். இது குறித்து மணிகண்டன் ஆர். எஸ். புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மணிகண்டனை தாக்கியது பூசாரிபாளையம் பனைமரத்தூர் ரோட்டை சேர்ந்த தொழிலாளி ரகுநாத்(33) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி