1. 200 கிலோ கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது!

74பார்த்தது
1. 200 கிலோ கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது!
கோவை கோவில்பாளையம் விஸ்வாசபுரம் அருகே போலீசார் நேற்று இளைஞர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் தீபக்குமார் (19) மற்றும் சிந்து ஜான் (21) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் 1. 200 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இரு இளைஞர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி