தந்தை திட்டியதால் 11வது வகுப்பு மாணவி தற்கொலை

39996பார்த்தது
தந்தை திட்டியதால் 11வது வகுப்பு மாணவி தற்கொலை
சென்னை கோயம்பேடு முனியப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். டாட்டா ஏஸ் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்துஜா (16) என்ற மகளும், சரண் (12) என்ற மகனும் இருந்தனர். இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இந்துஜா 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நீண்ட நேரமாக செல்ஃபோனில் அரட்டையடித்து கொண்டிருந்துள்ளார். இதனை மோகனசுந்தரம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த இந்துஜா வீட்டில் இருந்து புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் எழுத்து பார்த்தபோது மகள் பிணமாக தொங்கியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி