22 புண்ணிய தீர்த்த கிணறுகளின் நீராடிய மோடி (வீடியோ)

2968பார்த்தது
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அதன்படி கேலோ விளையாட்டு போட்டிகை தொடங்கி வைத்த அவர், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பேக்கரும்புக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். பின்னர் சாலை மார்க்கமாக ராமேஸ்வரத்திற்கு சென்றடைந்த அவர் அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடினார். அதன் பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தக் கிணறுகளில் நீராடிவிட்டு ராமர் பாதத்தை தரிசித்தார். பின்னர் கோவில் நிர்வாகம் சாரிப்பில் பூஜைகளும் மரியாதைகளும் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி