சந்திரபாபுவின் ஹெலிகாப்டர் வழிமாறியதால் பதற்றம்

579பார்த்தது
சந்திரபாபுவின் ஹெலிகாப்டர் வழிமாறியதால் பதற்றம்
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து அல்லூரி சீதாராமன் ராஜூ மாவட்டத்தில் உள்ள அரக்கு பகுதிக்கு ஒரு விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார். இந்நிலையில் அவர் சென்ற ஹெலிகாப்டர் வழிமாறி சென்றது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஹெலிகாப்டரின் பைலட்டுக்கு எச்சரிக்கை விடுத்து தகவல் அனுப்பினர். இதனையடுத்து ஹெலிகாப்டர் சரியான பாதையில் இயக்கப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி