சானியா மிர்சாவை நிரந்தரமாக பிரிந்த கணவர்!

558பார்த்தது
சானியா மிர்சாவை நிரந்தரமாக பிரிந்த கணவர்!
இந்தியாவின் டென்னிஸ் ஜாம்பவானான சானியா மிர்சாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கிற்க்கும் 2010ஆம் ஆண்டு திருமணம் முடிந்து துபாயில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 4 வயதில் 'இஷான்' என்ற மகன் உள்ளார். இருவரும் பிரிந்து விட்டனர் என்று கடந்த சில நாட்களாக வதந்தி பரவிய நிலையில், தற்போது சோயப் மாலிக் பாகிஸ்தான் நடிகையான சனா ஜாவித்-ஐ திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள இருவரின் ரசிகர்களுக்கிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி