12 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தை பலி

54பார்த்தது
12 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தை பலி
பின்லாந்து நாட்டின் வான்டா நகரிலுள்ள வீர்டோலா பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 2) அந்த பள்ளி வளாகத்திற்குள் வந்த 12 வயது சிறுவன், துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த குழந்தைகளை நோக்கி சுட தொடங்கினார். இதனால் குழந்தைகள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை உயிரிழந்தது. மேலும், இரண்டு குழந்தைகள் பலத்த காயத்துடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொடர்ந்து, துப்பாக்கியால் சுட்ட அந்த சிறுவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி