உலகின் மிக உயரமான ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றில் இந்த கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பாலத்தில் ரம்பன் முதல் ரியாசி வரை ரயில் சேவைகள் தொடங்கும். வடக்கு ரயில்வே இதனைத் தெரிவித்துள்ளது. தற்போது, கன்னியாகுமரியில் இருந்து கத்ரா வரையிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லாவிலிருந்து சங்கல்தான் வரையிலும் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.