தேர்தல் புதிய நடைமுறையை எதிர்த்து திமுக வழக்கு

52பார்த்தது
தேர்தல் புதிய நடைமுறையை எதிர்த்து திமுக வழக்கு
மக்களவை தேர்தலில் புதிய நடைமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. EVM மற்றும் கன்ட்ரோல் யூனிட் இடையே VVPAT எந்திரத்தை வைப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என திமுக புகார் அளித்துள்ளது. ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை ஒரே இணைப்பில் வைக்கக் கோரி திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் EVM, VVPAT இணைப்பாகவும் கன்ட்ரோல் யூனிட் தனியாகவும் வைத்து பயன்படுத்தப்பட்டது. வரும் மக்களவை தேர்தலில் மூன்றையும் ஒரே இணைப்பில் வைத்து பயன்படுத்த திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.