வில்லிவாக்கம் - Villivakkam

பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது

பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது

நாடு முழுவதும் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி வரை பாஸ்போர்ட் சேவை பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது, பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்கள் இயங்காது. ஆகஸ்ட் 29ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஆகஸ்ட் 30ஆம் தேதி வழக்கமாக நடைபெறும் ஆவணம் சரி பார்ப்பு நேர்காணல்களும் ரத்து செய்யப்படுகிறது. தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 2024 ஆகஸ்ட் 29 வியாழன் இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2 திங்கள் காலை 6 மணி வரை இயங்காது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்தவர்கள் நேரமுள்ள பிற நாட்களில் மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


சென்னை