சென்னை: சமூக வலைதளங்களில் பிறரது புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பிறரது புகைப்படங்களை ஆபாசமாகவும், கொச்சையாகவும் சித்தரித்து வெளியிடுபவர்களுக்கு தமிழக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனிநபரின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் சித்தரித்து வெளியிடுவது குற்றம் என்றும், அவ்வாறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ₹3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். சமூக வலைதளங்களில் தனியுரிமையை மதிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.