வில்லிவாக்கம் - Villivakkam

கணவரை கொன்று மனைவி நாடகம்: வில்லிவாக்கத்தில் பரபரப்பு

கணவரை கொன்று மனைவி நாடகம்: வில்லிவாக்கத்தில் பரபரப்பு

வில்லிவாக்கம், சிட்கோ நகர், 57வது தெருவைச் சேர்ந்தவர் கவுஷபாஷா, 49. இவரது மனைவி ஷாஜிதா பானு, 38. கடந்த பிப். , 28ம் தேதி, கவுஷபாஷா வீட்டில் மயக்கமடைந்ததாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அதேநாளில் இறந்தார். சம்பவம் குறித்து வில்லிவாக்கம் போலீசார் விசாரித்த போது உடல்நலக்குறைவால் இறந்ததாக போலீசில் ஷாஜிதா பானு கூறினார். இதையடுத்து, போலீசார் இயற்கை மரணம் பிரிவில் வழக்கு பதிந்து, உடலை பிரேத பரிசோதனை செய்து மனைவியிடம் ஒப்படைத்தனர். இயற்கை மரணம் என்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை, தாமதமாக கடந்த வாரம் போலீசாருக்கு கிடைத்தது. அதில், கவுஷபாஷா கழுத்து இறுக்கப்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் விசாரணையில், ஷாஜிதா பானு கடந்த ஜன. , மாதம் பாலியல் தொழிலில் ஈடுபட்டதால் வில்லிவாக்கத்தில் கைது செய்யப்பட்டு விடுதியில் அடைக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து மீண்டும் ஷாஜிதா பானுவை போலீசார் விசாரித்தனர்.

வீடியோஸ்


சென்னை