வில்லிவாக்கம் - Villivakkam

சென்னை: கூட்டுறவு சங்க காலியிடங்கள்: அரசாணை வெளியீடு

சென்னை: கூட்டுறவு சங்க காலியிடங்கள்: அரசாணை வெளியீடு

கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள், கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமால், நேரடி நியமன நடைமுறையின் மூலம் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விற்பனையாளர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் எழுதி படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும் அந்தந்த மாவட்ட கூட்டுறவுத் துறையின் ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நேர்காணல் நடைபெறும். நவ. 7 மாலை 5. 45 மணி வரை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். சென்னையில் 33 விற்பனையாளர்கள், 315 கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 58 விற்பனையாளர்கள், 13 கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோஸ்


சென்னை
சென்னை: முரசொலி செல்வம் மறைவு; மு. க. ஸ்டாலின் உருக்கம்
Oct 10, 2024, 09:10 IST/ஆயிரம் விளக்கு
ஆயிரம் விளக்கு

சென்னை: முரசொலி செல்வம் மறைவு; மு. க. ஸ்டாலின் உருக்கம்

Oct 10, 2024, 09:10 IST
என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கட்சியிலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன் என முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தை தாக்கி, வேதனை குருதியை வடிய செய்கிறது. கருணாநிதியும் அவரது மனசாட்சியான முரசொலி மாறனும் மனதில் நினைப்பதை எழுத்தில், செயலில் நிறைவேற்றியவர் பாசத்துக்குரிய முரசொலி செல்வம். திமுகவின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராக பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயக குரலாக ஒலித்தவர். சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கட்சியுடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர் என் பேரன்புக்குரிய அண்ணன் முரசொலி செல்வம். கருணாநிதி நம்மை விட்டு பிரிந்த பிறகு, நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை, கொள்கை தூணை இழந்து நிற்கிறேன். செல்வமே. முரசொலி செல்வமே. பண்பின் திருவுருவமே. திராவிட இயக்கத்தின் படைக்கலனே. கட்சியின் கொள்கை செல்வமே. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர் என பதிவிட்டுள்ளார்.