புதிய கல்விக் கொள்கை - பேரவைத் தலைவர் மு. அப்பாவு கருத்து

60பார்த்தது
புதிய கல்விக் கொள்கை - பேரவைத் தலைவர் மு. அப்பாவு கருத்து
புதிய கல்விக் கொள்கையை ஏதிர்ப்பது தமிழக அரசின் நோக்கமல்ல, 5-ம் வகுப்பில் தோற்றால் குலத்தொழிலுக்கு செல்ல வேண்டும் என்பதையே முதல்வர் எதிர்க்கிறார் என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப் போட்டி, கருத்தரங்கம் சென்னை சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக் பள்ளியில் இன்று நடைபெற்றது. நிகழ்வுக்கு, விழாக் குழுவின் தலைவர், பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலைமையேற்றார்.

விழாவில் பேசிய அப்பாவு, நாட்டிலேயே தமிழகம் தான் கல்வியில் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில், ஒதுக்கப்பட்ட மொத்த நிதியான ரூ. 4, 42, 292 கோடியில், கல்விக்கு மட்டும் ரூ. 44, 000 கோடியை முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கியுள்ளார். நாம் இந்த அளவுக்கு நிதியை கல்விக்காக ஒதுக்கி வருகிறோம். ஆனால்,  மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைகையை கொண்டுவந்து அதில் கையெழுத்திட்டால் தான் நிதியைத் தருவோம் என்று சொல்வது நியாயமா?

புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பது தமிழக அரசின் நோக்கம் கிடையாது. ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால், தந்தை செய்த குலத்தொழிலுக்கு சென்றுவிட வேண்டும் என்ற மறைந்த ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையை கொண்டு வருவதைத்தான் முதல்வர் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி