திருவொற்றியூர் வாக்காளர்களுக்கு கலாநிதி வீராசாமி நன்றி

76பார்த்தது
திருவொற்றியூரில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு எம். பி. கலாநிதி வீராசாமி நன்றி தெரிவித்தார். திமுக பகுதிச் செயலாளர் அருள்தாசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

வட சென்னை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக அயலக அணித் தலைவர் கலாநிதி வீராசாமி மீண்டும் போட்டியிட்டு 4, 97, 333 வாக்குகளைப் பெற்று, 1, 58, 111 வாக்குகள் வித்தியாசத்தில் ராயபுரம் மனோவை தோற்கடித்தார். வடசென்னை தொகுதியில் திமுகவின் கலாநிதி வீராசாமி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் மேற்கு பகுதியில், திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் வழக்கறிஞர் வை. ம. அருள்தாசன் ஏற்பாட்டில் அண்ணா நகர், சாஸ்திரி நகர், நேரு நகர், 2வது வட்ட அலுவலகம், கத்திவாக்கம் ஐ ரோடு, காட்டுக்குப்பம், வள்ளுவர் நகர், காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து கலாநிதி வீராசாமி சந்தித்து நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வடகிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ். சுதர்சனம் எம். எல். ஏ. , திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே. பி. சங்கர், இந்தியா கூட்டணிக் கட்சிகள் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி