ஆயிரம் விளக்கு - Thousand lights

சென்னை: தமிழக மீனவர்கள் 32 பேர் கைது - வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்கள் 32 பேர் கைது - வாசன் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், அவர்களின் 5 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்று வழக்கம்போல் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 32 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவக் குடும்பங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். காரணம் வருமானம் ஈட்ட முடியாமல், வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.  தமிழக அரசும் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலைப் பாதுகாக்கும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் மத்திய அரசு, தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கு ஏற்ப இலங்கை அரசுடன் கண்டிப்போடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


சென்னை