சென்னை: கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு

83பார்த்தது
சென்னை அண்ணாசாலையில் ரூ.5.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தமிழக அரசின் கைத்தறி, துணிநூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாக செயல்படுகிறது. தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள் உட்பட 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. பட்டு மற்றும் பருத்தி ரகவகைகளின் பாரம்பரிய மற்றும் நாகரிக சமகால வடிவமைப்புகளைக் கொண்டு சிறந்த கைத்தறி ரகங்களை வணிகப்படுத்தும் நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் விளங்குகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைக் காலங்களில் புதிய வடிவமைப்பு ரகங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் மனங்களை எப்போதும் கவர்ந்து வருகிறது. 

இதற்கிடையில், கோ-ஆப்டெக்ஸின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், சென்னை அண்ணாசாலையில் கோ-ஆப்டெக்ஸ் கோலம் விற்பனை நிலையம் புதியதாக கட்டப்பட்டது. இந்த விற்பனை நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், முதல் விற்பனை மற்றும் சிறப்பு விற்பனையை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி