சென்னை: தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி முதல்வர் கவுரவிப்பு

63பார்த்தது
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது விடுதலை ராஜேந்திரனுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது து. ரவிக்குமாருக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2025-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது புலவர் மு. படிக்கராமுவுக்கும், 2024ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது எல். கணேசனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது கே. வி. தங்கபாலுவுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் பொன். செல்வகணபதிக்கும், தமிழ்த்தென்றல் திரு. வி. க. விருது மருத்துவர் ஜி. ஆர். ரவீந்திரநாத்துக்கும், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் விருது வே. மு. பொதியவெற்பனுக்கும் தமிழக முதல்வர் வழங்கி சிறப்பித்தார். மேலும், 2024ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது விடுதலை ராஜேந்திரனுக்கும், 2024 ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது து. ரவிக்குமாருக்கும் வழங்கி முதல்வர் சிறப்பித்தார். மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் விருது 2024-ல் தோற்றுவிக்கப்பட்டு, முதன்முறையாக இவ்விருதை முத்து வாவாசிக்கு முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி