முல்லை பெரியாறு அணை ஆய்வு: ராமதாஸ், தினகரன் வலியுறுத்தல்

68பார்த்தது
முல்லை பெரியாறு அணை ஆய்வு: ராமதாஸ், தினகரன் வலியுறுத்தல்
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுநடத்ததுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தடை பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள அரசின் கோரிக்கையை ஏற்று, முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்புகுறித்து ஆய்வு நடத்த, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு ஆணையிட்டுள்ளது.

அணையை வலுப்படுத்தி, நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தீர்ப்பு இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில், பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்துவது, தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கான பரிந்துரையை, மத்திய நீர்வள ஆணையம் திரும்பப் பெற வேண்டும்.

முல்லை பெரியாறில் புதியஅணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் திட்டத்துக்கு மத்தியஅரசு துணைபோகக் கூடாது. அணையின் பாதுகாப்பு குறித்தஆய்வு என்ற பெயரில், தென் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்துடன், மாநில அரசின் உரிமையும் பறிபோகும் சூழல் ஏற்படும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மவுனமாக இருப்பது, விவசாயிகளுக்கு இழைக்கும் துரோகமாகும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி