தியாகராய நகர் - Thiyagarayanagar

நீதிபதி சந்துரு ஆணைய பரிந்துரைகள்: கே. பாலகிருஷ்ணன் கருத்து

நீதிபதி சந்துரு ஆணைய பரிந்துரைகள்: கே. பாலகிருஷ்ணன் கருத்து

பள்ளி மாணவர்களிடையே சமத்துவ உணர்வை வளர்ப்பதற்காக நீதிபதி சந்துரு ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகளைப் படிக்காமலேயே பாஜக எதிர்க்கிறது என மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் சில பள்ளிகளில் நடைபெற்ற விரும்பத்தகாத தீண்டாமை வன்குற்றங்களைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு நியமித்தது. விரிவான அறிக்கையை முதல்வரிடம் வழங்கியுள்ளது. அந்த அறிக்கையின் சில தலைப்புகள் ஊடகங்களில் செய்தியாகின. அதை மட்டுமே வைத்துக்கொண்டு அறிக்கையின் உள்ளடக்கம் என்னவென்று தெரியாமலேயே அறிக்கையை நிராகரிப்பதாக பாஜக தீர்மானம் நிறைவேற்றியது கேலிக்கு ஆளாகியுள்ளது. ‘தீண்டாமை ஒரு பெருங்குற்றம் - ஒழிக்கப்பட வேண்டும்’ என்ற உணர்வுடன்தான் தமிழ்நாட்டின் பாடநூல்கள் வெளிவருகின்றன. அதை மாணவர்கள் மனதிலும் வலுவாக ஊன்றச் செய்வதன் மூலமே சாதிய சிந்தனையை பின்னுக்குத் தள்ளி சமத்துவ இலக்கை நோக்கி முன்னேற முடியும். ஆனால், மாணவப் பருவத்திலேயே சாதியால் அவர்களைப் பிளவுபடுத்தி, சாதிய உணர்வை கெட்டிப்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயத்துக்கு ஏங்கும் பாஜகவுக்கு சமத்துவத்துக்கான இந்த நடவடிக்கை எட்டிக்காயாக கசக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


சென்னை
வறுமையை ஒழிப்பதில் தமிழகத்துக்கு முதலிடம்: அரசு பெருமிதம்
Jul 21, 2024, 06:07 IST/துறைமுகம்
துறைமுகம்

வறுமையை ஒழிப்பதில் தமிழகத்துக்கு முதலிடம்: அரசு பெருமிதம்

Jul 21, 2024, 06:07 IST
இந்தியாவிலேயே வறுமையை ஒழிப்பதில் தமிழகம் தலைசிறந்த முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்பதை நிதி ஆயோக் அறிக்கை நிரூபித்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலைநோக்குச் சிந்தனைகளுடன் செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களால் வறுமை ஒழிப்பில் தமிழகம் இன்று இந்தியாவிலேயே முதல் இடம் பெற்றுச் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. மாதம் ரூ. 1, 000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1, 000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து விடியல் பயணத் திட்டம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், சமத்துவத்தை நிலைநாட்டும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் இந்தியாவிலேயே வறுமையை ஒழிப்பதில் தமிழகம் தலைசிறந்த முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்பதை இந்த நிதி ஆயோக் அறிக்கை நிரூபித்துள்ளது. அதாவது 11 இனங்களில் தமிழகம் நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகளில் தேசிய சராசரியைவிட அதிகமாக வளர்ச்சி பெற்று முன்னணி மாநிலமாகவும், 2 இனங்களில் தேசிய சராசரிக்கு இணையாகவும் வளர்ச்சி பெற்று 13 இனங்களில் மிகவும் சிறந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.