ஆளுநர் பங்கேற்ற ஹிந்தி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை

61பார்த்தது
சென்னையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கலந்துகொண்ட ஹிந்தி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள ஒரு வரி பாடப்படவில்லை என சர்ச்சை கிளம்பியுள்ளது.

சென்னையில் டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற 'ஹிந்தி மாத' கொண்டாட்ட விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்றார்.

விழாவின் தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசைக்கப்பட்டது. அப்போது, அதில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்னும் வார்த்தை இடம்பெற்ற வரி பாடப்படவில்லை. இதில் 'திராவிடம்' என்ற சொல் இடம்பெற்றுள்ளதால் அந்த வரி தவிர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி