வியாசர்பாடியை சேர்ந்தவர் சிவகுமார், 58. மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். தன் வீட்டருகே வசிக்கும் கணவனை விட்டு பிரிந்து வந்த 30 வயது பெண்ணுக்கு, சிவகுமார் உதவி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த கோபிநாத், 41, என்பவர் இதை கொச்சைப்படுத்தி பேசி வந்துள்ளார்.
கடந்த 25ம் தேதியும் இதே போல, டீ கடையில் வழக்கம் போல் சிவகுமாரையும் அப்பெண்ணையும் தொடர்பு படுத்தி கோபிநாத் பேசியுள்ளார். சிவகுமார் தட்டிக் கேட்ட போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டியுள்ளார்.
சிவகுமாரை அக்கம் பக்கத்தினர் சேர்ந்து மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கோபிநாத்தை செம்பியம் போலீசார் கைது செய்தனர்.