410 ஆசிரியர்களுக்கு பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

67பார்த்தது
410 ஆசிரியர்களுக்கு பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கடந்த 10 ஆண்டுகளாக பணி கிடைக்காமல் காத்திருக்கும் 410 ஆசிரிய பட்டதாரிகளுக்கு தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, பணி நியமனம் கிடைக்காமல் காத்திருக்கும் 410 ஆசிரியர்கள் புதிய அரசாணைப்படி, நியமனத் தேர்வை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என். கவிதா ராமேஷ்வரும், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பணனும் ஆஜராகி வாதிட்டனர்.

தொடர்புடைய செய்தி