கோயில் அகற்றத்தால் கதறி அழுத பெண்கள்!

2228பார்த்தது
சென்னை, மதுரவாயல் பகுதியில் 60 ஆண்டு பழைமையான நாகாத்தம்மன் கோயில் ஒன்று இருந்தது. இந்நிலையில், தனது வீட்டின் முன்பு ஆக்கிரமிப்பு நிலத்தில் கோயில் உள்ளதாக, சாந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் கோயிலை அகற்றினர். அப்போது பெண் பக்தர்கள் சாமியாடியதுடன், சிலையை பிடித்துக்கொண்டும் மார்பில் அடித்துக்கொண்டும் கதறி அழுதனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி