மாடுபிடி வீரர் கொலை வழக்கில் 2 பேர் கைது

70பார்த்தது
மாடுபிடி வீரர் கொலை வழக்கில் 2 பேர் கைது
திருச்சி லால்குடி அருகே நன்னிமங்கலத்தைச் சேர்ந்தவர் அருண்ராஜ் (40). மாடுபிடி வீரர். திருமணமான இவருக்கு பிளாரன்ஸ் மேரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இதே பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர் தயாளன் (43). சென்னையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அருண்ராஜ்-தயாளன் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை தயாளன், அவரது நண்பர்களான ஹானஸ்ட் ராஜ் (35), பிரபு(30), ஆரோக்கியதாஸ் மகன் சங்கர், அலெக்ஸ் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் சேர்ந்து அருண்ராஜை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

லால்குடி போலீசார் கொலை வழக்குப்பதிந்து தயாளன் உள்ளிட்ட 6 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில், தயாளன், சங்கர் ஆகிய இருவரையும் போலீசார் திங்கள்கிழமை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி