சென்னை சிபிஐ அலுவலகத்தில் பொன். மாணிக்கவேல் கையெழுத்திட்டார்

64பார்த்தது
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், ஓய்வுபெற்ற ஐஜி-யான பொன். மாணிக்கவேல் ஆஜராகி கையெழுத்திட்டார்.

சர்வதேச சிலை கடத்தல் கும்பலுக்கு காதர் பாஷா சிலைகளை விற்பனை செய்துவிட்டதாக கடந்த 2017ம் ஆண்டு, அப்போதையை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன். மாணிக்கவேல் வழக்குப்பதிவு செய்து காதர் பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தார். அப்போது காதர் பாஷா திருவள்ளூர் மாவட்டம் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்த காரணத்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த மாதம் 10ம் தேதி பாலவாக்கத்தில் உள்ள பொன். மாணிக்கவேல் வீட்டில் டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, கடந்த மாதம் 30ம் தேதி பொன். மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி, நான்கு வார காலத்துக்கு சென்னை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து பொன். மாணிக்கவேல் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கைழுத்திட்டுச் சென்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி