அதிமுக ஆட்சியிலும் கொலைச் சம்பவங்கள் நடந்தன: வைகோ

72பார்த்தது
அதிமுக ஆட்சியிலும் கொலைச் சம்பவங்கள் நடந்தன என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணி பெறும். மத்திய பட்ஜெட் வெறும் கானல் நீர். இது ஒருபுறமிருக்க மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும். மேகேதாட்டு விவகாரத்தில் பேச்சுவார்த்தை கூடாது. தமிழக காங்கிரஸ் கர்நாடகம் சென்று மேகேதாட்டு கட்டக் கூடாது என்று சொல்ல முடியுமா. அங்கொரு கொள்கை, இங்கொரு கொள்கை இருக்கிறது. எனினும் இதைத் தடுக்க திமுக தலைமையிலான கூட்டணி தீவிரமாக செயல்படுகிறோம்.
அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. அதிமுக ஆட்சியிலும் கொலைச் சம்பவங்கள் நடந்தன. இதைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள் பாதுகாப்போடு இருக்கின்றனர். போதை பொருள்கள் தான் இதுபோன்ற கொலை சம்பவங்களுக்கு ஒரு காரணமாக அமைகிறது. இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக அரசு நடுநிலையோடு செயல்படுகிறது. மத்திய அரசு பல மாநிலங்களை ஓரவஞ்சனையோடு தான் பார்க்கிறது. கேரளா மாநிலத்துக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி