திமுக ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி: டிடிவி தினகரன்

67பார்த்தது
திமுக ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை 219-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி திரு. வி. க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது, தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை மருந்து வியாபாரம், போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. அதில், திமுகவை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கிறது. அவர்களுடைய பாதுகாப்பிலும் உதவியிலும் தான் நடப்பதாக செய்திகளில் பார்க்கிறேன். இந்த ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு கிடையாது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுவது தவறு. கொலை கொள்ளைக்கு கூலிப்படையினர் எளிதாக கிடைப்பதற்கு சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது என்பதுதான் உண்மை.

உதயநிதி துணை முதல்வரான உடனே அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டு வர போகிறாரா. மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என தமிழ்நாட்டில் தினமும் ஏதாவது ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி