இலங்கை அரசின் சதிக்கு உடனே முடிவுகட்ட வேண்டும் - அன்புமணி

77பார்த்தது
இலங்கை அரசின் சதிக்கு உடனே முடிவுகட்ட வேண்டும் - அன்புமணி
தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ. 3. 50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரில் 12 பேருக்கு தலா ரூ. 3. 5 கோடி (இந்திய மதிப்பு ரூ. 1 கோடி) அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

அபராதத்தை செலுத்தத் தவறினால் மீனவர்கள் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மீதமுள்ள 10 மீனவர்கள் தொடர்பான வழக்கு வரும் 10-ஆம் தேதி விசாரணைக்கு வரும் போது அவர்களுக்கும் இதே தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மீனவர்களை ஒடுக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி