பாடகர் மனோவின் இரு மகன்கள் மீதும் வழக்குப்பதிவு

68பார்த்தது
பாடகர் மனோவின் இரு மகன்கள் மீதும் வழக்குப்பதிவு
மதுபோதையில் 16 வயது சிறுவன் உட்பட இருவரை கட்டையால் தாக்கிய, பிரபல பாடகர் மனோவின் இரு மகன்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனோவின் மகன்கள் ரஃபிக், சாஹீர் மீது 3 பிரிவுகளில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணை நடத்த வளசரவாக்கத்தில் உள்ள மனோ வீட்டிற்கு போலீசார் சென்ற நிலையில் இருவரும் வீட்டில் இல்லை என கூறியுள்ளனர். இதனால், இருவரும் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி