ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் டிடிஎப் வாசன் மீது வழக்கு!

77பார்த்தது
ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் டிடிஎப் வாசன் மீது வழக்கு!
செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் கைதான யூடியூபர் டிடிஎப் வாசன் மீது ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வேகமாக வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், விதிகளை மீறியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பிறருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையில் ஒரு காரியத்தை செய்தல் என மற்றொரு பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் செல்போன் பேசியபடி கார் ஓட்டிச் சென்ற டிடிஎப் வாசன், அவர் வெளியிட்ட வீடியோவால் சிக்கினார்.
மதுரை அண்ணாநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி