குட்டியை சுமந்து சென்ற தாய் கரடியால் அச்சம்

59பார்த்தது
நீலகிரி: கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கோத்தகிரியில் இருந்து கன்னிகாதேவி காலனி செல்லும் சாலையில் மாலை நேரத்தில் சாலையில் ஒய்யாரமாக நடந்துச்சென்ற தாய் கரடி குட்டியை சுமந்து சென்றதால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். நீண்ட நேரம் சாலையில் சுற்றி திரிந்த கரடி அருகில் இருந்த தேயிலை தோட்டத்துக்குள் சென்றது.

பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளை சுற்றித்திரியும் கரடிகளால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்,
வனத்துறை கூண்டு வைத்து பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி