உலகளவில் 185 நாடுகளில் 30 வகையான புற்று நோய்களின் தரவுகளைக் கொண்டு 2022-ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவில் 2050-ம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்புகள் 19 மில்லியனாக உயரும் என்றும், புற்றுநோய் இறப்புகள் 10.5 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது 93% உயர்வாகும். 65 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம் காணப்படும் புற்றுநோய் இறப்புகள் 117 சதவீதமாக அதிகரிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.