பேருந்து தீ விபத்து.. அரசு விளக்கம்!

71பார்த்தது
பேருந்து தீ விபத்து.. அரசு விளக்கம்!
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் CNG மாற்றம் செய்யப்பட்டு 28.06.2024 அன்று முதல் தடத்தில் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் (ஜுலை 2) மதியம், பேருந்து பிராட்வேயிலிருந்து 10 பயணிகளுடன் சிறுசேரி நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது அடையார் பணிமனை அருகில் ஓட்டுநர் என்ஜின் அருகே புகை வருவதை கவனித்தவுடன் பேருந்தை உடனடியாக நிறுத்தி, பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்டார்.

காவல்துறை மற்றும் தீ அணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீ அணைக்கப்பட்டு அருகில் இருந்த அடையாறு பணிமனைக்கு பேருந்து பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டது. மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பேருந்தில் இருந்த பயணிகளுக்கும், அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி