Iron Box-ல் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

76பார்த்தது
Iron Box-ல் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
திருவள்ளூர் அடுத்த விடையூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் தீபக்குமார் (14). இவர், தனது துணிகளை தேய்ப்பதற்காக, Iron Box-ஐ சூடு படுத்தியுள்ளார். ஓவர் ஹீட் ஆனதை தொடர்ந்து, தனது துணிகளை தேய்க்கத் தொடங்கினார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி