மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கபில் பாட்டீல் தோல்வியடைந்தார். இங்கு சரத் பவாரின் வேட்பாளர் சுரேஷ் மத்ரே வெற்றி பெற்றார். இதனால், ஷாஹாபூர் தாலுகாவைச் சேர்ந்த சஞ்சய், தனது தலைவரின் தோல்வியைத் தாங்க முடியாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கபில் பாட்டீல் தான் வெற்றி பெறுவார் என அவர் எப்பொழுதும் எல்லோரிடமும் கூறி வந்திருக்கிறார். ஆனால், அவர் தோற்ற நிலையில் சஞ்சய் உயிரழந்துள்ளார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு இளம் மகன் உள்ளனர்.