சென்னையில் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் இன்று (ஜூன் 06) நடைபெற்றது. இதில், வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடலின் வெப்பநிலை அதிகரித்ததன் காரணமாக வரும் நாட்களில் கனமழையும், வலுவான புயலும் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் உடல்நலம் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும். ஒவ்வொரு பகுதிகளிலும் வேறு மாதிரியான தாக்கங்கள் இருப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றார்.