மும்பையில் இன்று (மே 13) புழுதிப் புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக மக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. இந்த நிலையில், இந்த புயல் காரணமாக ராட்சத இரும்பு விளம்பரப் பலகை ஒன்று சரிந்து விழுந்தது. இந்த எதிர்பாராத விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் விபத்தில் காயம் அடைந்தோருக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.