வணிக வளாகத்தில் பெரும் தீ விபத்து!

84பார்த்தது
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அக்ரோபோலிஸ் வணிக வளாகத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3-வது மாடியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியதையடுத்து, வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதையடுத்து, 10 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் வணிக வளாகத்தில் பற்றியத் தீயை அணைக்க போராடி வருகின்றனர். வணிக வளாகத்திற்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டதென்று தகவல் வெளியாகவில்லை.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி